கோடி அற்புதரும், பதுவை புனிதருமான புனித அந்தோனியார் திருவிழாவானது 08.06. 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 15.00 மணிக்கு திருச்செபமாலையு டன் ஆரம்பித்து 15.30 மணிக்கு அருட்பணி. ரஜினிகாந்த் தலைமையில் இயக்குநர் அருட்பணி. முரளிதரன், அருட்பணி ஸ்ரெபான் (புனித அந்தோனியார் ஆலயப் பொறுப்பாளர்) ஆகியோர் இணைந்து திருவிழாத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். அருட்பணி. ரஜினிகாந்த் தனது மறையுரையில் புனித அந்தோனியாரின் புதுமைகள் பற்றியும், புனிதரை நம்பி வந்தோர் வெறும் கையராய் திரும்பிப் போகமாட்டார்கள் என்று மிகச் சிறப்பாக எடுத்துக் கூறி இன்னும் எமது விசுவாசத்தை ஆழப்படுத்தினார்.
திருப்பலியின் இறுதியில் புனிதரின் திருச்சுரூபப் பவனியானது ஆலயத்தில் அமைதியான முறையில் நடைபெற, ஆர்ப்பரிப்புகளும், செபங்களும், பாடல்களும் பக்தியாக சொல்லப்பட்டன. இறைமக்கள் அனைவரும் இதில் பக்தியாக பங்கேற்றனர். திருச்சுரூபப் பகுதியின் போது இந்த ஆண்டு யூபிலி ஆண்டாகையால் யூபிலி ஆண்டை நிறைவு செய்யும் தம்பதிகளும் இந்தப் பவனியில் இணைந்திருந்தனர்.
பவனியின் முடிவில் இறுதிச் செபத்துடன் புனிதரின் ஆசீரானது அருட்பணி முரளிதரனால் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான இறைமக்கள் பல்வேறு பணியகங்களில் இருந்து பங்கேற்று புனிதரின் ஆசீரைப் பெற்றனர். திருவிழாவின் இறுதியில் பணியகத்தினரால் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. இந்தத் திருவிழா நல்ல முறையில் நடந்தேற இயக்குநருடன் இணைந்து பணியாற்றிய பணியக உறுப்பினர்கள் மற்றும் பணியக இறைமக்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.