பாதுவா புனித அகஸ்ரினார் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற மன்னார் மறை மாவட்டத்தைச் சார்ந்த அருட்பணி. அ. றஜனிகாந் அடிகளார் தலைமையில், கொழும்பு உயர் மறைமாவட்டத்தைச் சார்ந்த பொதுநிலை ஆணைக்குழவின் இலங்கைக்கான இயக்குனர் அருட்பணி. யூட் ராஜ் அடிகளாரும், சமூகத்தொடர்பு மையத்தின் தேசிய இயக்குனர் யூட் கிறிஸாந் அடிகளாரும், சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியக இயக்குநர் அருட்பணி. யூட்ஸ் முரளிதரன் அடிகளாரும் இணைந்து கூட்டுத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனியும், ஆசீரும் இடம்பெற்றது. இத்திருவிழாவிற்கு ஏனைய மானிலங்களைச் சார்ந்த பணியக இறைமக்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று, மரியன்னையின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.