புனித லூர்து அன்னை திருவிழா (ஆர்கவ் பணியகம்)
  • Home
  • புனித லூர்து அன்னை திருவிழா (ஆர்கவ் பணியகம்)

Save

ஆர்கவ் பணியகப் பாதுகாவலியாம் புனித லூர்து அன்னை திருவிழாவானது 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த திருவிழாத் திருப்பலியை தற்போது வடக்குலண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அமலமரித்தியாகிகள் சபையைத் சார்ந்த அருட்பணி. விமல் தலைமையேற்று ஒப்புக்கொடுத்தார். இன்னும் இந்தத் திருவிழாவிற்கு இலங்கை ஆயர்மன்றத் தலைவரும், குருநாகல் மறைமாவட்ட ஆயருமாகிய அதிவந்தனைக்குரிய கெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை அவர்களும், இலங்கை கண்டி குருமட பேராசிரியரும்,இத்தாலி ரோமாபுரியில் உள்ள ஊர்பானியா, அல்போன்சியா பல்கலைக்கழகங்களின் பேராசிரியருமான அருட்பணி. விமல் திரிமான, நீர்கொழும்பு லொயோலா கல்லூரியின் அதிபர் அருட்பணி. ஜோன் கெனடி, குருநாகல் மறைமாவட்டத்தின் உதவி நிதியாளர் அருட்பணி. நலிந்த ஆகியோரும் இணைந்து இந்த திருவிழாத் திருப்பலியை சிறப்பித்தனர்.

திருப்பலியின் இறுதியில் அன்னையின் திருச்சுரூபப் பவனியும் இடம்பெற்றது. பவனியின் போது ஆர்ப்பரிப்புகளும், செபங்களும், பாடல்களும் சிறப்பாக இடம்பெற்று பக்தியாக மக்களை பவனியில் ஒன்றுபட வைத்தன. இறுதியில் அன்னையின் பிரியாவிடை செபத்துடன் ஆயர் அவர்களால் அன்னையின் ஆசி வழங்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு எல்லாப்பணியகங்களிலிருந்தும் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசீரைப்பெற்றனர். விசேடமாக இந்த வழிபாட்டிற்கு பாடல்களைப்பாட பணியக பாடகர்களுடன் மத்திய குழு இளையோர் பாடகர் குழாமும் இணைந்து பாடி திருவிழாவை சிறப்பித்தனர்.

இந்த விழா சிறப்புற நடைபெற இயக்குநருடன் இணைந்து பணியாற்றிய பணியக இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்து கொள்கிறோம்.

      

 

       

 

      

 

      

 

      

 

      

 

         

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

      

 

       

 

      

 

      

 

       

 

      

 

      

 

      

 

      

 

Share:

More Posts

புனித பேதுரு திருவிழா (லுட்சேர்ண் பணியகம்)
புனித அந்தோனியார் திருவிழா (சப்கவுசன் பணியகம்)
அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா