அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா
  • Home
  • அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா

Save

 அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழாவானது 15.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம் பெற்றது. திருவிழாத் திருப்பலியானது அருட்பணி ரஜினிகாந்த் தலைமையில் அருட்பணி ஜெறி ஜோசப், இயக்குநர் அருட்பணி முரளிதரன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். இவர்களுடன் மடாலயத்திற்கு பொறுப்பான அருட்பணி பிலிப் ஸ்டைனர் அவர்களும் இணைந்து ஒரு சிறிய உரையை வழங்கியிருந்தார்.

அருட்பணி ரஜினிகாந்த் தனது மறையுரையில் அன்னையின் மகிமை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறியிருந்தார். இந்த திருவிழாவிற்கு இளையோர் பாடகர் குழாம் இணைந்து பாடல்களைப் பாடியிருந்தனர். திருப்பலியின் முடிவில் அன்னையின் திருச்சுரூபமானது ஆலயத்தினுள் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன் போது ஆர்ப்பரிப்புகளும், செபங்களும் சொல்லப்பட்டு அன்னையின் பாடல்களும் பாடப்பட்டன.
பவனியின் முடிவில் இயக்குநர் அருட்பணி முரளிதரனால் இறுதிச் செபம் சொல்லப்பட்டு திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டது. இந்தத் திருவிழாவில் மிக அதிகளவான இறைமக்கள் பங்கேற்று அன்னையின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர். இந்தத் திருவிழாவை இயக்குநருடன் இணைந்து மத்திய குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஒழுங்குப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

 

   

Share:

More Posts

புனித அந்தோனியார் திருவிழா (சப்கவுசன் பணியகம்)
அயின்சீடல்ன் கறுப்பு மாதா திருவிழா
புனித அந்தோனியார் திருவிழா(பாசல் பணியகம்)