சப்கவுசன் பணியக இறைமக்களின் பாதுகாவலரான புனித அந்தோனியார் திருவிழாவானது 28.06.2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. திருவிழாத் திருப்பலியை அருட்பணி. ரஜனிகாந்த் உடன் இயக்குநர் அருட்பணி. முரளிதரனும் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். திருவிழாத் திருப்பலியின் இறுதியில் திருச்சுரூபப்பவனி இடம் பெற்று புனிதரின் ஆசீர் இயக்குநரால் வழங்கப்பட்டது. இந்தத் திருவிழாவிற்கு பல பணியங்களில் இருந்து இறைமக்கள் பலர் கலந்து கொண்டு புனிதரின் ஆசீரைப் பெற்றுச் சென்றனர். இறுதியாக பணியக மக்களால் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.