அருட்பணி சந்திரகாந்தன், அருட்பணி. அன்ரனி சோசை, எமது ஆன்மிக இயக்குனர் அருட்பணி. முரளிதரன் ஆகியோர் இணைந்து திருவிழாத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியினைத் தொடர்ந்து புனித பேதுருவின் திருச்சுரூப பவனி நடைபெற்றது. இறுதியாக இலங்கை ஆயர் மன்றத்தலைவர் மேதகு ஹரால்ட் அன்ரனி பெரேரா ஆண்டகையினால் திருச்சுரூப ஆசீர் வழங்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு ஏனைய மானிலங்களைச் சார்ந்த பணியக இறைமக்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று புனிதரின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.