மடுமாதா திருவிழா
  • Home
  • மடுமாதா திருவிழா

Save

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் மருதமடு மாதா திருவிழா 17-08-2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மரியஸ்ரைன் ஆலயத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகியது. அருட்பணி. முரளிதரன், அருட்பணி. பிரசாந் மற்றும் இந்தியா தென்காசி மறைமாவட்டைத்தைச் சேர்ந்த அருட்பணி. பொஸ்கோ ஆகியோர் இணைந்து திருவிழாத்திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து மருதமடுத்தாயின் முடிசூட்டப்பட்ட 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு மருதமடுத்தாயின் திருச்சுரூபத்திற்கு சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிகப்பணியக இயக்குனர் அருட்பணி. முரளிதரன் அவர்களால் மணிமுடி சூட்டப்பட்டதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனியும், ஆசீரும் இடம் பெற்றது.
ஆன்மிக இயக்குனரின் வழிகாட்டலில் ஒழுங்கமைக்கப்பட்ட இத்திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக சுவிஸ் நாட்டின் வெளிநாட்டவர்களுக்கான ஆன்மிக பணிப்பளார் திருமதி. இசபெல் வாஸ்கஸ், மரியஸ்ரைன் ஆலய பணிப்பாளர் அருட்பணி பீற்றர் சூரி, மரியஸ்ரைன் திருத்தல இயக்குனர் அருட்பணி. லூட்விக் ஆகியோர் பங்கு பற்றியதுடன், சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியக அனைத்து மானிலங்களைச் சோர்ந்த பணியக இறைமக்களும், சிறப்பாக அதிகளவிலான இளையோர்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று மரியன்னையின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.

   

 

 

 

 

 

   

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      

 

      

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

 

 

 

 

   

 

   

 

   

 

Share:

More Posts

புனித அந்தோனியார் திருவிழா(பாசல் பணியகம்)
புனித லூர்து அன்னை திருவிழா (ஆர்கவ் பணியகம்)
புனித பேதுரு திருவிழா (லுட்சேர்ண் பணியகம்)