இயக்குனர் அருட்பணி. முரளிதரன் அவர்களின் தலைமையில், உரோமையில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் அருட்பணி. அன்ரனி சோசை, அருட்பணி. குழந்தை சாமி, அருட்பணி. ஜெறி யோசப் ஆகியோர் இணைந்து திருவிழாத் திருப்பலியலினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனியும், ஆசீரும் இடம்பெற்றது. சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிக இயக்குநர் அருட்பணி. முரளிதரன் அவர்களின் வழிகாட்டலில் ஒழுங்கமைக்கப்பட்ட இத்திருவிழாவிற்கு சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக அனைத்து மானிலங்களைச் சார்ந்த பணியக இறைமக்களும், சிறப்பாக இளையோர்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று மரியன்னையின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.