சுவிஸ் தமிழ்க்கத்தோலிக்க ஆன்மிக இயக்குநர் அருட்பணி. முரளிதரன் அவர்களின் வழிகாட்டலில் திருவிழா ஒழுங்கமைக்கப்பட்டு 08-06-2024 சனிக்கிழமை மாலை 19.00 மணிக்கு மாலைப்புகழ் வழிபாடும், 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.30 மணிக்குத் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது.
உரோமில் உயர் கல்வி கற்கின்ற அருட்பணி. அன்ரனி சோசை அடிகளாரின் தலைமையில் அருட்பணி. பிரான்சிஸ் காளான், அருட்பணி. பிலிப்பு, எமது இயக்குனர் அருட்பணி. முரளிதரன் ஆகியோர் இணைந்து திருவிழாத் திருப்பலியலினை ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியினைத் தொடர்ந்து புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனியும், ஆசீரும் இடம்பெற்றது. இத்திருவிழாவிற்கு ஏனைய மானிலங்களைச் சார்ந்த பணியக இறைமக்களும் உணர்வுபூர்வமாக பங்கேற்று புனிதரின் ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனர்.